Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் அக்னீஸ்வரர் கோவிலில் ... ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை ருத்ர லிங்கேஸ்வரர் கோவிலில் சங்கடகர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2022
12:02

மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில்  துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் சுவாமி அகோர மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தளத்தில் நவக்கிரகங்களில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளார். காசிக்கு இணையான தளங்களில் முதன்மையான இங்கு பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதுடன், மெய்கண்டார் அவதரித்ததும் ஆகும் இத்தலத்தில் சுவாமி எமனை சம்ஹாரம் செய்வதாக ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் இந்திரப் பெருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் பாபு குருக்கள் தலைமையிலானோர் பூஜைகள் நடத்திய பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது தொடர்ந்து தேரோட்டத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு துர்கா ஸ்டாலின் அன்னதானம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பூம்புகார் நிவேதா முருகன் சீர்காழி பன்னீர்செல்வம் மற்றும் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் தேரோட்டத்திற்கு ஏற்பாடுகளை திருவெண்காடு கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar