Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை இயல்பு நிலைக்கு ... திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் அக்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கடலுார் அக்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2022
10:02

 மாமல்லபுரம் : கடலுார் அக்னீஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த கடலுார் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், பல நுாற்றாண்டுகள் பழமையான, சொக்கநாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

சிலை பிரதிஷ்டைகோவில் அறங்காவலராக சூணாம்பேடு ஜமீன்தார் பரம்பரையினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவில் நீண்டகாலம் பராமரிப்பின்றி, உருக்குலைந்து சீரழிந்து, வழிபாடும் தடைபட்டது. இது குறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அறங்காவலர், புனரமைப்பு பணிகளை துவக்கி, மூன்றாண்டுகளுக்கு முன், 80 சதவீத பணிகளை முடித்தனர்.இறுதிகட்ட பணிகள் முடிக்கப்படாமல், கும்பாபிஷேகம் தாமதமானது. இந்நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடானது. பழமையான சொக்கநாயகி மூலவர் கற்சிலையை, பிரதிஷ்டைக்காக கையாண்டபோது, அதன் கால்கள் பகுதி, இரண்டு துண்டுகளாக உடைந்தது. அறநிலையத் துறையினர் ஆய்வைத் தொடர்ந்து, தற்போது புதிய கற்சிலை செய்து, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.மஹா தீபாராதனைகடந்த 18ம் தேதி, கோ பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை என துவக்கி, நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை உள்ளிட்டவற்றை முடிந்தது. அதைத் தொடர்ந்து, அக்னீஸ்வரர், சொக்கநாயகி உள்ளிட்ட சன்னிதிகள் விமானங்களுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், சுவாமி, அம்பாள் மூலவர் ஆலய கும்பாபிஷேகம் நடத்தி, மஹா தீபாராதனை நடந்தது. அறங்காவலர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar