பதிவு செய்த நாள்
04
மே
2022
08:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது.
செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 22 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம், 13 ஆண்டு தேர்திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. அன்று காலை 7 மணிக்கு வினாயகர் பூஜை, அனுக்ஜை, கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடந்தது. 8.30 மணிக்கு செல்லியம்மன் பூங்கரகம் ஜோடித்து அழைத்து வருதல், தொடர்ந்து சாகை வார்த்தல் நடந்தது. மாலை 7 மணிக்கு நவசந்தி காப்பும், பூங்கரகம், அம்மச்சார் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் 1008 பால் குடங்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். பகல் 11 மணிக்கு செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேக, தொடர்ந்து அம்மச்சார் அம்மனுக்கும் பாலாபிஷேகமும், இரவு சாமி வீதி உலா நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், ஊராட்சி தலைவர் முருகன், விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் நடந்தது. இன்று (4ம் தேதி, மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும், 6ம் தேதி மாலை திருவிளக்கு பூஜையும், 8ம் தேதி காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.