Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலக்கல் மாரியம்மன் திருவிழா ... ஒத்தக்கடை யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் வரும் 15ல் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு ஒத்தக்கடை யோக நரசிங்கப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி மண்டபம் கட்ட பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி மண்டபம் கட்ட பக்தர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

10 மே
2022
11:05

தாயமங்கலம்: இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி மண்டபம் கட்டுவதற்கு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.இங்கு பங்குனி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கலந்துகொண்டு தீச்சட்டி எடுத்தல் கரும்பாலை தொட்டில்,பொங்கல் வைத்தல் ஆடு,கோழிகளை பலியிடுதல் போன்ற ஏராளமான நேர்த்திக் கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் வாரந்தோறும் செவ்வாய்,வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில் கோயில் உள் பிரகாரத்தை சுற்றி மண்டபங்கள் இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதினால் பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளதாக பக்தர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த பக்தர் பாண்டியன் கூறுகையில்,தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சன்னதியை ஒட்டி உள்பிரகாரத்தில் மண்டபங்கள் இல்லாததால் திருவிழா மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்கள் வரிசையில் நிற்கும் போது வெயிலிலும்,மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.ஆகவே அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக தாயமங்கலம் கோயில் உள் வளாகத்தில் மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அருப்புக் கோட்டையைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் கூறுகையில்,தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள் வளாகத்தில் மண்டபங்கள் கட்டினால் திருவிழாக் காலங்களிலும், வார இறுதி நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதற்கு வசதியாக இருக்கும்.ஆகவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக மண்டபம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar