Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கைகொண்ட சோழபுரம் ... ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் திறக்கும் மகாலிங்கேஸ்வரர் கோவில் திறப்பு : பக்தர்கள் பரவசம் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் திறக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி ஆதிபராசக்தி பீடத்தில் பங்காரு அடிகளார் அருளாசி
எழுத்தின் அளவு:
புதுச்சேரி ஆதிபராசக்தி பீடத்தில் பங்காரு அடிகளார் அருளாசி

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
03:06

புதுச்சேரி : புதுச்சேரி ரெயின்போ நகரில் புதுப்பிக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்திற்கு வருகை தந்த மேல்மருவத்துார் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட திருக்குட முழுக்கு விழாவில் பங்கேற்க, மேல்மருவத்துார் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.

அவருக்கு கோரிமேடு எல்லையில் சொக்கநாதன் பேட்டை, ரெயின்போ நகர், முத்தியால்பேட்டை உள்ளடங்கிய புதுச்சேரி மாநில நிர்வாகக் குழுவினர், மூன்று சக்தி பீடங்கள், 21 மன்றங்களின் பொறுப்பாளர்கள், பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஊசுட்டேரியில் உள்ள பண்ணை இல்லத்தில் ஓய்வு எடுத்த ஆன்மிக குரு, நேற்று காலை 7.௦௦ மணியளவில் காரில் புறப்பட்டு, சிதம்பரம் சென்றார்.காலை 9.௦௦ மணியளவில், ஆன்மிக குரு தலைமையில் சிதம்பரத்தில் உள்ள முத்தையா நகர் சித்தர் சக்தி பீடத்திற்கு திருக்குடமுழுக்கு விழா நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா முடிந்து, சிதம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்தார். ரெயின்போ நகரில் புதுப்பிக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்திற்கு வருகை தந்து, கருவறை அன்னைக்கு தீபாராதனை செய்து, அருளாசி வழங்கினார். அங்கு குழுமியிருந்த செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.முன்னதாக கருவறை அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.காலை 6.௦௦ மணியளவில், அன்னை அருளிய முறைப்படி சிறப்பு கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மேல்மருவத்துார் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வருகையையொட்டி புதுச்சேரியில் இரு நாட்களாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar