Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்வர் யாத்திரை பாதுகாப்பு : ... விருதுநகரில் ஆக.,1ம் தேதி உள்ளூர் விடுமுறை விருதுநகரில் ஆக.,1ம் தேதி உள்ளூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை : தர்ப்பணம் கொடுக்க சுருளி அருவியில் திரண்ட மக்கள்
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை : தர்ப்பணம் கொடுக்க சுருளி அருவியில் திரண்ட மக்கள்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2022
11:07

கம்பம்: சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், திருபுவனம், கொடுமுடி, சுருளி அருவி ஆகிய ஊர்கள் பிரசித்தி பெற்றதாகும். சுருளி அருவியில் இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் வரத் துவங்கியது, ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் அருவியில் குளித்து விட்டு, ஆற்றங்கரையோரம் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தங்களின் முன்னோர்களின் பெயர்களை கூறி தர்ப்பணம் செய்தனர். எள்ளும் தண்ணீரும் சுருளியாற்றில் கரைத்தனர். தர்ப்பணம் கொடுத்த பின்னர் இங்குள்ள பூதநாராயணர் கோயில், சுருளி வேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் தீபமேற்றி வழிபட்டனர், ஆதி அண்ணாமலையார் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை சிவனடியார் முருகன் சுவாமிகள் செய்தார். முன்னதாக ஆதி அண்ணாமலையார் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தாண்டு அருவியில் குளிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் விழுந்தது பொதுமக்கள் மத்தியில் திருப்தியை ஏற்படுத்தியது.

போக்குவரத்து நெரிசல் :, நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும், சிறப்பு பஸ்கள் இயங்கப்பட்டதால், அருவிக்குள் நுழைய முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் முன்னெச்சரிக்கையாக பழைய பாளையம் ரோட்டில் வாகனங்களை திருப்பிவிட்டபோதும், நெருக்கடியை தவிர்க்க முடியவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar