Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் பிரதோஷ பூஜை விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிக்கோளோடு வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்: தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம்
எழுத்தின் அளவு:
குறிக்கோளோடு வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்: தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2022
10:08

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், பள்ளிப் புரவலர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பேசியது: மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இல்லாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். கல்விநிறுவனங்களில் ஒழுக்கமும் கல்வியும் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது. அனைத்து மூங்கில்களும் புல்லாங்குழல் ஆவதில்லை. ஒருசில மூங்கில்கள்தான் ஆகிறது. நமது பள்ளியில் பயிலும் மாணவர்கள் புல்லாங்குழல் ஆக வேண்டும். மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஆதீனமே ஏற்கும் என்றார். விழாவில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குருமகா சந்நிதானம் முன்பு யோகாசனங்களை செய்து காட்டினர். தொடர்ந்து, மாணவர் தலைவர், இலக்கியமன்றத் தலைவர், விளையாட்டுக்குழு தலைவர் மற்றும் மாணவ அணித்தலைவர்கள் குருமகா சந்நிதானம் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். நிகழ்ச்சியில், ஆட்சிமன்றக்குழு துணைத் தலைவர்கள் முருகேசன், ஞானசேகரன், செயலாளர் பாஸ்கரன், நிர்வாக செயலாளர் வி.பாஸ்கரன், பொருளாளர் சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆட்சிமன்றக்குழு தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். பள்ளி முதல்வர் சரவணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar