Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை அக்னிபுரீஸ்வரர் ... வரிச்சிக்குடி வரசித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரிச்சிக்குடி வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே நாளில் ஏழு கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஒரே நாளில் ஏழு கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
03:08

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சோழன்பேட்டை கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோயில்கள் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழன்பேட்டை கிராமத்தில் அக்ரகாரத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத சபாபதீசுவரர் ஆலயம், ஸ்ரீ தில்லைமா காளியம்மன் ஆலயம், ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலயம், ஸ்ரீ ராமர் மடம், ஸ்ரீ மன்மதீஸ்வரர் ஆலயம், சப்தகன்னி ஆலயம் ஆகிய ஏழு கோயில்கள் அமைந்துள்ளன. பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த கோயில்கள் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மகா பூர்ணாகுதியுடன் மகா தீபாரதனை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. அதனை எடுத்து புனித கடங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயங்களை வந்தடைந்தது. வேதியர்கள் மந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித கடங்களின் நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை அடுத்து மூலவர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பணி குழு தலைவர் சூரி.விஜயகுமார் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். சோழம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar