Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news செம்பை சங்கீத உற்சவம் கோலாகல ... திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கிருஷ்ணர் திருவண்ணாமலையில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வையக்குண்டு அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
வையக்குண்டு அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

04 செப்
2022
07:09

பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வையக்குண்ட அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா நடந்தது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது.

நேற்று காலை 7 மணி அளவில் பத்திராதரவை கிராமத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட அய்யனார், கருப்பண்ணசாமி, குதிரை, கணேசர், பைரவர், வீரபத்திரர், தவழும் பிள்ளை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட உருவங்களை சுமந்து வந்து பள்ளிக்கூடம் அருகே வரிசையாக வைத்தனர். பின்பு காலை 9 மணி அளவில் நேர்த்திக் கடனாக செலுத்தப்படும் பொம்மைகளை வரிசையாக அடுக்கி அவற்றிற்கு தேங்காய் உடைத்து சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பொம்மைகளை கைகளில் சுமந்தபடி வையக்குண்ட அய்யனார் கோயில் வளாகத்தில் வைத்தனர்.

கிராம மக்கள் கூறியதாவது;
உலக நன்மைக்காகவும், விவசாயத்திற்கு முறையாக பருவமழை பெய்ய வேண்டியும் மூன்று வருடத்திற்கு ஒரு முறை குதிரை எடுப்பு விழா நடத்துவது வழக்கமாகும். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தற்பொழுது 5 வருடத்திற்கு பிறகு குதிரை எடுப்பு விழா நடத்தப்படுகிறது. இப் பூஜையில் கலந்து கொண்ட பின்பு மழை பெய்வதாக ஐதீகம் நிலவுகிறது என்றனர். வண்ணாங்குண்டு, புதூர், நேருபுரம், மேதலோடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். அய்யனார் கோயில் டிரஸ்டி ரத்தினம், நிர்வாகிகள் டீஸ், வேலுச்சாமி, பூபதி, ஆறுமுகம், ஊராட்சி தலைவர் தியாகராஜன் உள்பட கிராம தலைவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரவு 10 மணியளவில் சத்திய ஹரிச்சந்திரா நாடகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar