Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரவள்ளி அம்மன் கோயில் புரட்டாசி ... திருமலை ஏழுமலையான் கோவில் கிரகணத்தால் 12 மணி நேரம் மூடல் திருமலை ஏழுமலையான் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

13 அக்
2022
07:10

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்ட திருவிழா இரு ஆண்டுகளுக்கு பின் நேற்று வெகு சிறப்புடன் நடந்தது.

நேற்று முன்தினம் முத்தாலம்மனுக்கு கோயில் மைய மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். நள்ளிரவு 02:30 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தேர் திருவிழா நிறுத்தப்பட்டிருந்ததால், மூன்றாம் ஆண்டான நேற்று ஏராளமான பக்தர்கள் போட்டி போட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சென்ற வழி முழுவதும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், உருவ பொம்மைகளை காணிக்கை செலுத்தியும், ஆடு, கோழிகளை பலியிட்டும் அம்மனை வழிபட்டனர். நேற்று மதியம் 1:30 மணியளவில் தேர் நிலையம் சேர்ந்தது. அங்கு மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, தேரிலிருந்து அம்மன், கோயிலுக்கு எழுந்தருள செய்தனர். மாலையில் மஞ்சள் நீராட்டும், இரவு மாவிளக்கு வழிபாடும், அம்மன் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு ஆற்று நீரில் கரைப்பதற்காக அம்மன் எடுத்துச் செல்லப்பட்டார். அப்போது அம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு பிரியா விடை வழங்கி விடை பெற்றார். பக்தர்கள் அம்மன் மீது பூக்களை தூவி வணங்கினர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர். வத்திராயிருப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு நடந்த தேரோட்ட திருவிழாவினால் வத்திராயிருப்பு பஜார் வீதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar