Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருச்செந்தூரில் சிறப்பாக நடந்தது ... சபரிமலை பக்தர்களுக்கு உதவ மொபைல்ஆப் : கேரள அமைச்சர் தகவல் சபரிமலை பக்தர்களுக்கு உதவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திர விழா
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திர விழா

பதிவு செய்த நாள்

03 நவ
2022
05:11

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நான்காயிர திவ்ய பிரபந்தத்தை துவக்கி வைத்த முதல் ஆழ்வார்கள் திருநட்சத்திர விழா நடந்தது.

ஆழ்வார்களில் முதன் முதலில் அவதரித்த பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி நான்காயிர திவ்ய பிரம்மந்தத்தை தமிழில் பாசுரங்களாக பாடினர். அவர்களின் திரு நட்சத்திர தினமான இன்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்திய பூசை, 8:30 மணிக்கு பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள மாமுனிகள் புறப்பாடாகி பெருமாள், தாயார், ஆண்டாள், வேணுகோபாலன் சன்னதியில் எழுந்தொளி மங்களாசாசனம் நடந்தது. பாண்டிய மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமயத்தை தேகளீச பெருமாள் எழுந்தருள உடன் ஆழ்வார்களுக்கும் விசேஷ திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு நாலாயிர பிரபந்த பாசுரங்கள் சேவா காலம் துவங்கி, சாற்றுமரை, பிரசாத விநியோகம், சுவாமிகள் ஆஸ்தானம் எழுந்தருளினர். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar