Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுார் முத்தாலம்மன் கோயில் விழா கோவை முத்துமாரியம்மன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் கோவை முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா: சுவாமி வீதிஉலா வாகனங்கள் சீரமைப்பு பணி
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா:  சுவாமி வீதிஉலா வாகனங்கள் சீரமைப்பு பணி

பதிவு செய்த நாள்

17 நவ
2022
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 27-ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து பத்து  நாட்கள்  விழா நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் டிச.,  6-ல் அதிகாலை கோவில் கருவறை முன்,  4:00 மணிக்கு பரணி தீபம், அன்று மாலை, 6:00 மணிக்கு கோவிலின் பின்புறம் அமைந்துள்ள, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்படும்.  கொரோனோ பரவலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடவீதியில் சுவாமி உலா நடக்காமல், கோவிலின் ஐந்தாம்  பிரகாரத்தில் வலம் வந்தது.  இதனால், சுவாமி வீதிஉலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல் இருந்தன. இந்தாண்டு மாடவீதியில் சுவாமி வீதியுலா நடக்கிறது.  விழா நடக்கும், 10 நாட்களும் காலை மற்றும் மாலையில், இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷா மிருகம், தங்க ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆயிரங்கால் மண்டபம் அருகே வைத்திருந்த, சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடக்கிறது.  ஏழாம் நாள்  விழாவில்,  மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வர்ணம் தீட்டும் பணி நடக்கிறது. கோவிலில் உள்ள சன்னதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 
temple news
எப்போதுமே விநாயகர் சதுர்த்தி தமிழகம் எங்கும் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். இந்த வருடம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar