Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையை சுகாதாரமாக பராமரிக்க 2 ... சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. நேற்று அதிகபட்ச கூட்டம்; நடை அடைத்தாலும் படியேற அனுமதி சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு: தேவசம் போர்டு அதிகாரிகள் நிம்மதி
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு: தேவசம் போர்டு அதிகாரிகள் நிம்மதி

பதிவு செய்த நாள்

20 நவ
2022
07:11

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் வருகை, ஆன்லைன் வாயிலாக செய்யப்படும் முன்பதிவால், பக்தர்களின் எண்ணிக்கை முன்கூட்டியே தெரிய வருகிறது. இதையடுத்து, பக்தர்கள் பிரச்னை இல்லாமல் அய்யப்பனை தரிசனம் செய்ய முடிவதால், தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நிம்மதியாக உள்ளனர்.

இது குறித்து சன்னிதானம் போலீஸ் தனி அதிகாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது: கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை ஆன்லைன் முன்பதிவு இருந்தாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். மீதமுள்ளவர்கள் புக்கிங் செய்யாமல் வருவர். இதனால் பல நாட்களில் கூட்டம் அலைமோதும். சில நாட்கள் 20 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் நிற்பர்; சில நாட்கள் சன்னிதானம் வெறிச்சோடி காணப்படும். தற்போது அனைத்து பக்தர்களுமே ஆன்லைனில் முன்பதிவு செய்து தான் வர வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், எந்த நேரத்தில், எத்தனை பக்தர்கள் வருவர் என்ற விபரம் போலீசுக்கும், தேவசம் போர்டுக்கும் முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. இதற்கேற்ப தேவசம்போர்டு பிரசாதங்களை தயார் செய்கிறது; தேவைப்படும் அளவுக்கு போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர். இதனால், எந்த பதற்றமும் இல்லாமல் அதிகாரிகள் நிம்மதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். நடை திறந்த நவ., 16ல், 18 ஆயிரத்து 777 பேர் தரிசனம் செய்தனர். கார்த்திகை முதல் நாளான நவ., 17ல், 49 ஆயிரத்து 817 பேர் பதிவு செய்திருந்தாலும் 43 ஆயிரத்து 407 பேர் மட்டுமே தரிசனம் செய்தனர். இன்று, 45 ஆயிரத்து 691 பேர்; நாளை 63 ஆயிரத்து 365; நாளை மறுநாள் 47 ஆயிரத்து 98 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கேற்ப முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar