பதிவு செய்த நாள்
07
செப்
2012
02:09
புரட்டாசி: சுறுசுறுப்பை பிறவிக்குணமாகக் கொண்ட கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் தன் சொந்த நட்சத்திரமான அஸ்தத்தில் பயணத்தை துவக்குகிறார். சுக்கிரன், சூரியன், புதன், குரு அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். செல்வாக்கை வளர்க்கும் முயற்சியில் நன்மை உண்டு. எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இளைய சகோதரர்களின் வாழ்வு வளம்பெற உதவுவீர்கள். உறவினர் வருகை குடும்பத்தில் சந்தோஷம் தரும். உங்களுக்கு சொந்தமான வீடு, நிலங்களில் நம்பிக்கையானவர்களை குடியமர்த்துவது நல்லது. வெளியூர் பயணங்களில் தகுந்த பாதுகாப்பு, திட்டமிடுதல் அவசியம். உடல்நலன் நன்றாக இருக்கும். கடன் தொந்தரவு குறையும். தம்பதியர் பாசத்துடன் நடந்து உறவினர்களிடம் நற்பெயர் பெறுவர். நண்பர்களிடம் கொடுத்த பணம் கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். உற்பத்தியும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரிகள் விற்பனை சிறந்து உபரி வரவு காண்பர். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். பணியாளர்கள் எளிதாகச் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகைகள் திருப்திகரமாக கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு கணவரின் அன்பும், தாராள பணவசதியும் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். புத்திரர்களை நல்வழி நடத்துவதில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய தொழில்நுட்ப கருவி வாங்குவர். உற்பத்தி, தரம் சிறந்து விற்பனை அதிகமாகும். உபரி வருமானம் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அரசியல்வாதிகள் அவப்பெயர் நீங்கி மதிப்பு, மரியாதை பெறுவர். எதிர்பாராத வகையில் பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பணவரவு கூடும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படித்து தேர்வுகளில் முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம்; துர்க்கையை வழிபடுவதால் வாழ்வில் சகல வளமும் ஏற்படும்.
உஷார் நாள்: 27.9.12 அதிகாலை 2.16- 29.9.12 காலை 9.
வெற்றி நாள்: அக்டோபர் 4, 5, 6
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8