பதிவு செய்த நாள்
12
பிப்
2023
11:02
புனர்பூசம் - 4: சொல்லாற்றலும் செயலாற்றலும் மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே, நீங்கள் எடுக்கும் காரியங்களை சாதிக்கும் ஆற்றல் மிக்கவர். இந்த மாதம் நட்சத்திரநாதன் குரு வலுவாக ஒன்பதாமிடத்தில் அமர்ந்திருக்கிறார். உங்கள் ராசியை பார்க்கிறார். சாமர்த்தியமாக பேசி காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட துாரத்தில் இருந்து வரும் தகவல் நன்மையாக இருக்கும். மதி நுட்பத்தால் எந்த பிரச்னையையும் எளிதாக தீர்ப்பீர்கள். ஐந்தாமிடம் வலுவாக காணப்படுவதால் பூர்வீக சொத்து பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் தரும். குடும்ப ஸ்தானத்தை அதன் அதிபதி சூரிய பகவானே பார்ப்பதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்களின் ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். அரசியல்துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும். கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு நன்மை தரும். வாக்குவாதம் நீங்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 18, 19
அதிர்ஷ்ட தினம்: பிப். 13
பூசம்: எதிலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறும் குணமுடைய பூசம் நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் ராசியை குரு சனி பார்க்கிறார்கள். நட்சத்திரநாதன் சனி செவ்வாய்ச்சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். மிக நல்ல மாற்றங்கள் வரும். வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை நீங்கும். நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும். புகழ், கவுரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வாக்குவாதங்கள் அகலும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் கவனம் தேவை. பணியாளர்களுக்கு அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். பெண்கள் சமையல் செய்யும் போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வந்து சேரும். எதிர்பார்த்த பணவரவு கிட்டும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
பரிகாரம்: முருகனை வணங்கி வர எதிர்ப்பு விலகும். குடும்ப பிரச்னைகள் தீரும்.
சந்திராஷ்டமம்: பிப். 19, 20
அதிர்ஷ்ட தினம்: பிப். 13, 14
ஆயில்யம்: மனதில் பட்டதை செல்லும் குணமுடைய ஆயில்ய நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நட்சத்திரநாதன் புதன் ராசிக்கு மறைந்திருந்தாலும் அவரின் சாரம் பலம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. மனதில் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். தொழில் ஸ்தானத்தில் ராகு இருக்கிறார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பகைவர் தொல்லை நீங்கும். பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினர் கவனமாகப் பேசுவது நல்லது. அரசியல்வாதிகள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க திறமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: பிப். 20, 21
அதிர்ஷ்ட தினம்: பிப். 14, 15