Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிக்கவசத்தில் சுருட்டப்பள்ளி ... கூரத்தாழ்வான் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம் கூரத்தாழ்வான் கோவிலில் புஷ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
330 கோவில்களில் சிவராத்திரி விழா : ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
330 கோவில்களில் சிவராத்திரி விழா : ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2023
09:02

சென்னை : தமிழகத்தில் உள்ள, 330 சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன, என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கடந்த ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மஹா சிவராத்திரி பெருவிழா, பக்தர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், தஞ்சை பிரகதீஸ்வரர், பேரூர் பட்டீஸ்வரர், நெல்லை நெல்லையப்பர் ஆகிய ஐந்து கோவில்களில் மஹா சிவராத்திரி விழா, வெகு விமரிசையாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள, 330 சிவாலயங்களிலும், 18ம் தேதி மாலை முதல், 19ம் தேதி காலை வரை, மஹா சிவராத்திரி திருவிழா, சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவில் கோபுரங்களில் மின் அலங்காரம், பக்தர்கள் தரிசன வரிசை தடுப்பு வசதிகள், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை, சுகாதார, குடிநீர் வசதி; தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம், பக்தர்களின் வாகனங்களை நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மஹா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவு, தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், வில்லிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை இரவு முழுதும், பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில், உரிய ஏற்பாடுகளை நடந்து வருகிறது. அந்தந்த கோவிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களை வைத்தும், மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar