Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ... கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு வெள்ளி ஆபரணங்கள் கஜேந்திர வரதராஜப் பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி: அனைத்து சிவாலயங்களிலும் ஆன்மிக நிகழ்ச்சிகள் அறநிலையத்துறை உத்தரவு
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி: அனைத்து சிவாலயங்களிலும் ஆன்மிக நிகழ்ச்சிகள் அறநிலையத்துறை உத்தரவு

பதிவு செய்த நாள்

16 பிப்
2023
08:02

சென்னை :அனைத்து சிவன் கோவில்களிலும், மகா சிவராத்திரியையொட்டி, பாரம்பரிய கலை, கலாசார மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்த, கோவில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் தெரிவித்து உள்ளார்.

மண்டல இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: துறை ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து சிவன் கோவில்களிலும், வரும், 18ம் தேதி மாலை முதல், 19ம் தேதி காலை வரை, மகா சிவராத்திரி திருவிழா நடக்க உள்ளது. அதையொட்டி, பக்தர்களின் மனம் மகிழும்படி, நம் பாரம்பரிய கலை, கலாசார மற்றும் ஆன்மிக, சமய நிகழ்ச்சிகளை நடத்த, கோவில் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் கோபுரங்கள், சுவர்கள் போன்றவற்றில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மின் அலங்காரம் செய்ய வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், உரிய வரிசை தடுப்பு வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிப்பறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தீயணைப்பு வாகன நிறுத்தம் போன்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, அவர்கள் ஒத்துழைப்புடன், மகா சிவராத்திரி திருவிழாவை நடத்த வேண்டும். மங்கல இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவு, தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரதநாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசைப் பாடல்கள் போன்றவற்றை, குறிப்பிட்ட கால இடைவெளியில், மகா சிவராத்திரி முழுதும் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிகழ்ச்சிகளை, அந்தந்த கோவில் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களை வைத்தும், சிறப்பாக நடத்த வேண்டும். கலை நிகழ்ச்சிகளுக்கு, கலைஞர்களை தேர்வு செய்யும்போது, அந்தந்தப் பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும். கொரோனா தொற்று குறித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி செயல்பட வேண்டும். நிகழ்ச்சிகளை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் நடத்த வேண்டும். இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை நிறுத்த, தனியே இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதுகுறித்து, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar