Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ... திருத்தணி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் திருத்தணி கோவில் பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து சப்த மாதர் சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
மயிலத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து சப்த மாதர் சிற்பங்கள்

பதிவு செய்த நாள்

26 பிப்
2023
08:02

விழுப்புரம் : மயிலத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

விழுப்புரம் அடுத்த மயிலத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த சப்த மாதர் சிற்பங்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: மயிலத்தில் பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3ம் தேதி நடந்தது. அப்போது, அங்குள்ள மூலவர் சிலைக்குப் பின்புறம், பலகைக் கல்லில் வடிக்கப்பட்ட சில சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது. தற்போது அந்த சிற்பங்கள் வெளியே எடுக்கப்பட்டு, தனியே வைத்து வழிபடப்பட்டு வருகிறது. இந்தச் சிற்பங்களை, நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தோம். அப்போது, அதில் 4 சிற்பங்கள் 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாகவும் மற்ற 3 சிற்பங்கள் 18 அல்லது 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவையாகவும், சப்த மாதர் சிற்பங்களாக இருப்பது தெரியவந்தது. இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சோழர் காலத்தில் இப்பகுதியில் சப்த மாதர்களுக்கான தனி சிற்றாலயம் இருந்து, பின்னர் மறைந்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த சிற்பத் தொகுதியில் சில சிற்பங்கள் காலப்போக்கில் சேதம் அடைந்திருக்கலாம். இதனால், மூன்று சிற்பங்கள் மட்டும் 200 ஆண்டுகளுக்கு முன், புதிதாக செய்து வைக்கப்பட்டுள்ளன. சப்த மாதர் வழிபாடு, தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதுபோன்ற சிற்பங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிடைத்துள்ளன. விழுப்புரம் அடுத்த பிடாரிப்பட்டு கிராமத்தில் முதலாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்த (கி.பி.1012) சப்த மாதர் சிற்பங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மயிலம் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் மூலம், மயிலத்தின் பழமையும், தொன்மையும் தெரியவந்துள்ளது. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார். ஆய்வின் போது, அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் சரவணகுமார், மயிலம் ஒன்றிய கவுன்சிலர் செல்வகுமார், கேசவன், பிரேம்குமார், சரவணன் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar