பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் சிவாலயங்களில் சனிப் பிரதோஷம் வழிபாடு கோலாலமாக நடந்தது.
பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜய ராணி செய்திருந்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. காளஹஸ்தீஸ்வரர் கோயில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தேவானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் வளாகம் ஆதி காசி லிங்கேஸ்வரர் கோயில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகம் ஆராதனை நடந்தது.