திருக்கனுார் : குமாரப்பாளையம் எல்லை காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த மாசி மகத் தீர்த்தவாரியில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள எல்லை காளியம்மன் கோவில் வளாகத்தில் மாசி மகத் தீர்த்தவாரி நேற்று நடந்தது. தீர்த்தவாரியில் குமாரப்பாளையம் தண்டு மாரியம்மன், பிடாரிப்பட்டு, மணவெளி, டி. புதுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், குமாரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.