பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் கோதண்டராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடலுார் மாவட்டம்,பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்தது. பின்னர், திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிற்பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.