Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம்! உப்பூர் விநாயகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகராஜா கோயிலில் ஆவணி கடைசி ஞாயிறில் குவிந்தனர் பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2012
11:09

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி கடைசி ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தைவிட பக்தர்கள் அதிகமானோர் வந்து நாகராஜரை தரிசித்து செல்வது வழக்கம். இவற்றில் ஆவணி மாதம் சிறப்பாக கருதப்படுவதால் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்து சென்றனர். ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் இருந்தே நாகராஜா கோயிலில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தரிசனம் செய்து சென்றனர். குறிப்பாக குடும்பத்துடன் ஏராளமானோர் வந்ததால் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்தும், சுற்றுலா வந்த வெளிமாநில பக்தர்களும் அதிகமானோர் கோயிலுக்கு சென்று சமாதரிசனம் செய்தனர். நாகராஜா கோயிலில் சிறப்பு பூஜைமுறையான நாகபூஜை, மற்றும் நாகர் சிலைக்கு பால், மஞ்சள் அபிஷேக நேர்த்திக்கடனை பெண்கள் செய்தனர். ஆவணி கடைசி ஞாயிறை முன்னிட்டு பொதுப்பணித்துறை நீர்ஆதார அமைப்பு சார்பில் பக்தர்களுக்கு அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்னதானத்தை வனத்துறை அமைச்சர் பச்சைமால் துவக்கி வைத்தார். நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., குமரி பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, பொதுப்பணித்துறை நீர்ஆதார செயற்பொறியாளர் சுப்பிரமணியம், பி.ஆர்.ஓ. ஹரிராம், உதவி செயற்பொறியாளர்கள் கிறிஸ்துநேசகுமார், மலையரசன், சுப்பிரமணியம், ரமேஷ் உட்பட ஏராளமானோர் அன்னதானத்தில் கலந்துகொண்டனர். கோயிலில் நேற்று மாலை பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். மேலும் இரவில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகமானோர் வெகுநேரமாக காத்திருந்தனர். நாகராஜா கோயில், மற்றும் வளாக பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்று காலையில் இருந்து இரவு வரை நாகராஜா கோயிலை சுற்றியுள்ள ரோடுகளில் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. போக்குவரத்தை சீரமைக்கவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar