அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2023 11:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அருப்புக்கோட்டையில் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் 8 ம் நாள் பொங்கல் பண்டிகை, 9 ம் நாள் அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துதல், பூக்குழி இறங்குதல் உட்பட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அம்மன் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.