Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் வெள்ளி தேரோட்டம்; குழந்தை ... ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் நிறைவு; தேர் நிலைக்கு வந்தது
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் நிறைவு; தேர் நிலைக்கு வந்தது

பதிவு செய்த நாள்

06 மே
2023
11:05

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மழையால் தடைப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேர்வடம் பிடித்து நிலைக்கு வந்தது. பிரமோத்ஸவம் நிறைவடைந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரமோத்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். ஏப்.25 ல் கொடியேற்றி காப்புக்கட்டி பிரமோத்ஸவம் துவங்கியது. தினசரி இரவு வாகனங்களில் பெருமாள் திருவீதி வலம் வந்தார். 10ம் திருநாளான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4:45 மணிக்கு தேரோட்டம் வடம் பிடிக்கப்பட்டது. அப்போது பலத்த மழை துவங்கியது. இதனால் மாலை 5.35 மணி அளவில் தேர் முதல் வளைவில் திரும்பிய சற்று தூரத்தில் நின்று விட்டது. தொடர்மழையால் பாதுகாப்பு கருதி மீண்டும் வடம் இழுக்கவில்லை. மீண்டும் நேற்று காலை 10:16 மணி அளவில் மயில்ராயன் கோட்டை, பட்டமங்கல நாட்டர்கள் கூடி வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. கோயிலை வலம் வந்து காலை 11:16 மணிக்கு நிலைக்கு வந்தது. பக்தர்கள் உற்சாகத்துடன் தேர் வடம் பிடித்தனர். திருக்கோஷ்டியூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டும் தொடர் மழையால் தேரோட்டம் 2 நாட்கள் நடந்தது. இரவில் புஷ்பயாகம் வசித்தல் நடந்தது. இன்று இரவு நடைபெறும் புஷ்பப் பல்லக்குடன் பிரமோத்ஸவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar