Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் ... வைகாசி மூல நட்சத்திர வழிபாடு; ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் வைகாசி மூல நட்சத்திர வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி, ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாண வைபவம்
எழுத்தின் அளவு:
சீர்காழி, ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
09:06

மயிலாடுதுறை; சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட  திருவெண்ணீற்று மையம்மை உடனாகிய சிவலோக தியாகேசர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில், தோத்திரபூர்ணா பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில்   அன்றைய காலத்தில்  திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற  அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய இந்த ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில்  நடைபெறும்.    இந்த ஆண்டு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் செய்விக்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு  மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ,மகா தீபாராதனை காட்டப்பட்டது .அதன் பின்னர் உலக நன்மைக்காக பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.  திருக்கல்யாண வைபவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar