Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... மத நல்லிணக்கம்; 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகை கொண்டாடும் ஹிந்துக்கள்.. தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் மத நல்லிணக்கம்; 300 ஆண்டுகளுக்கு மேலாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் ஆடி சப்பர திருவிழா: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் ஆடி சப்பர திருவிழா: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2023
07:07

மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் கோவிலில் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி சப்பர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை இழுத்து வந்தனர்.

சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்க்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் தினந்தோறும் சிம்மம், அன்னம்,கமலம்,யானை, கிளி, விருஷபம் காமதேனும்,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய பின்னர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி சப்பர திருவிழாவிற்காக கோயில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த சக்கரத்திற்கு நேற்று மாலை ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினார் இதனைத் தொடர்ந்து சன்னதி புதுக்குளம், மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சப்பரத்தை 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர். சப்பரம் கோயிலை கண்டடைந்த உடன் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சக்கரத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வழிபட்டனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற உள்ளது.நாளை 31ம் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் இந்தாண்டிக்கான ஆடித் திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன்,ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar