Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... தேரில் வலம் வந்து அருள்பாலித்த காளஹஸ்தி, விஞ்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி தேரில் வலம் வந்து அருள்பாலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலை; அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுப்பு
எழுத்தின் அளவு:
பல்லவர் கால மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலை; அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுப்பு

பதிவு செய்த நாள்

10 ஆக
2023
03:08

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சி நத்தம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் யாத்ரீகர்கள், திருப்பதி மற்றும் திருத்தணி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்குவர்.

தற்போது மண்டபம் பழுதடைந்து உள்ளது. இருப்பினும், ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து, தற்போதும் ஆடிக்கிருத்திகை விழாவின் போது காவடிகளுடன் நத்தம் மண்டபத்தில் தங்கி வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை ஆம்பூர், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் நத்தம் மண்டபத்திற்கு வந்து தங்கினர். இரவு, 9:00 மணியளவில், அங்கு தங்கியிருந்த பக்தர் ஒருவர் மீது சாமி வந்து அருள்வாக்கு கூறி, மண்டபத்திற்குள் ஒரு பகுதியை காட்டி நிலத்தை தோண்டுமாறு கூறினார். அங்கு தோண்டிய போது, இரண்டரை அடி உயரமுள்ள, மயில் மேல் அமர்ந்துள்ள கற்சிலை ஒன்று இருந்ததை கண்டெடுத்தனர். தொடர்ந்து, நத்தம் கிராம மக்கள், சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். தகவல் அறிந்ததும், திருத்தணி தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து, கற்சிலையை கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆடிக்கிருத்திகை என்பதால், முருகர் சிலையை மூன்று நாட்கள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் உத்தரவு பெற்று எங்கள் கிராமத்திலேயே முருகர் சிலையை வைத்துக் கொள்வதற்கு அனுமதி கோருகிறோம் என, கடிதம் எழுதி, ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் தாசில்தாரிடம் கொடுத்தனர். இதையடுத்து, வருவாய் துறையினர் அங்கிருந்து புறப்பட்டனர்.

இது குறித்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா கூறியதாவது: நத்தம் மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட முருகர் சிலையை, முறைப்படி கருவூலகத்திற்கு கொண்டு வருவோம். பின், கிராமத்தினர் ஒப்புதல் கொடுத்து கடிதம் எழுதி கொடுத்தால், கற்சிலையை அவர்களிடம் ஒப்படைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஆடிக்கிருத்திகை விழா என்பதால், இரு நாட்கள் அந்த கிராமத்திலேயே சிலை இருக்கும். அதுவரை வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar