Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் ... தீத்தாம்பட்டி அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த தவிட்டு மாரியம்மன்
எழுத்தின் அளவு:
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த தவிட்டு மாரியம்மன்

பதிவு செய்த நாள்

18 ஆக
2023
05:08

மேட்டுப்பாளையம்: ஆவணி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, ரூபாய் நோட்டு அலங்காரத்தில் தவிட்டு மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்து வந்தனர். பெரும்பாலான கோவில்களில் இன்று ஆவணி மாதம் பிறந்தாலும், அதை ஆடி மாதத்தின் ஐந்தாவது வெள்ளிக்கிழமையாக, பக்தர்கள் கடைபிடித்து கோவில்களில் அம்மனுக்கு அலங்கார பூஜை செய்து வழிபட்டனர். மேட்டுப்பாளையம் காட்டூர், ஜெகநாதன் லே அவுட்டில் தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத ஐந்தாவது வெள்ளிக்கிழமை மற்றும் ஆவணி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்தனர். நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு, அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யும் பணியில், கோவில் அர்ச்சகர், பக்தர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு, அலங்காரம் செய்து முடித்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இது குறித்து கோவில் அர்ச்சகர் லோகேஸ்வரன் கூறுகையில், பக்தர்கள் வழங்கிய ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. நான்கு வாரம் நடந்த விழாவை காட்டிலும், ஐந்தாவது இந்த வாரம் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar