Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி தரிசனம்; டிசம்பர் மாத ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்; பக்தர்கள் பரவசம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகத்தில் அழியாதது, நிலையானது, சனாதன தர்மம் மட்டும் தான்
எழுத்தின் அளவு:
உலகத்தில் அழியாதது, நிலையானது, சனாதன தர்மம் மட்டும் தான்

பதிவு செய்த நாள்

25 செப்
2023
10:09

கோவை:எல்லாம் அழியக்கூடிய இந்த உலகத்தில் அழியாதது, நிலையானது, சனாதன தர்மம் மட்டும்தான், என, ஆச்சார்யா ஸ்ரீரங்காஜி பேசினார். கோவை ராம்நகரில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஆச்சார்யா ஸ்ரீரங்காஜி பேசியதாவது: சனாதன தர்மம் என்றால் என்ன என்று தெரியாமல், சிலர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். தெரியாத விஷயங்களை பற்றி பேசாமல் இருக்க வேண்டும். அப்படி பேசினால் அது உளறல் என்றுதான் அர்த்தம். 


இந்து தர்மத்தை பின்பற்றும் நாம், சனாதன தர்மம் என்னவென்று சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அதை பின்பற்றக்கூடிய சக்தி, நமக்கு இருக்க வேண்டும். எது சரியாக, உண்மையானதாக, நிரந்தரமாக இருக்கிறதோ, அதுவே சனாதன தர்மம். இயற்கையின் நியதியாக, இறைவனின் தன்மையாக இருப்பதுதான், சனாதன தர்மம். நமது வாழ்க்கையின் இறுதி லட்சியம், மோட்சம் பெறுவதாக இருக்க வேண்டும். அதை பெறுவதற்கு இறைவன் நமக்கு அளித்த தர்மத்தை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை நிறைவாகும். தர்மத்தை பின்பற்றுவோர், உண்மையை பேச வேண்டும், மற்றவர் பொருளை எடுக்க நினைக்க கூடாது. பிறருக்கு தீங்கு செய்யாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு ஒன்று வேண்டும் என்றால், அதை இறைவனிடம் கேளுங்கள். பகவான் கொடுத்தால் அதை நீங்கள் அனுபவிக்கலாம். கொடுத்தே ஆக வேண்டும் என, பகவானை நிர்பந்திக்கக்கூடாது. வேண்டியது கிடைக்கும் வரை, இறைவனை துதித்துக் கொண்டே இருங்கள். சனாதன தர்மத்தின் மொத்த உருவம் இறைவன். ஸ்ரீராமர், சிவன், அம்பாள் எல்லோரும் தர்மத்தின் உருவங்கள் தான். எல்லாம் அழியக்கூடிய இந்த உலகத்தில் அழியாதது, நிலையானது சனாதன தர்மம் மட்டும்தான். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar