Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி அமுதீஸ்வரர் கோயிலில் நடராஜர் ... திருமலை ராயப்பெருமாள் கோயிலில் அதிகாலை தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் திருமலை ராயப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி; பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி; பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 அக்
2023
11:10

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று (7ம் தேதி) சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுரிராஜபெருமாள் அருள்பாலித்தார். உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசபெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில்  நம்பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சி, பிருந்தாவன கோலாட்டம், வள்ளி கும்மியாட்டம் ஆகியவை நடந்தது. இரவு 7:00 மணிக்கு நடன நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில், பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உலா வந்து அருள் பாலிக்கிறார். கோவை, அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையத்தில் இருந்து மொண்டிபாளையம் கோவிலுக்கு இன்று சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கலூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் உட்பிரகாரத்தில் பெருமாள் உலா வருதலும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், பொகலூர் பெருமாள் கோவில், ஓரைக்கால் பாளையம் கோதண்ட ராமர் கோவில், செம்மாணி செட்டி பாளையம் அப்புச்சிமார் கோவில், குன்னத்தூர் நாராயணசாமி கோவில், வரதையம் பாளையம் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதல் மாலை வரை சிறப்பு வழிபாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar