Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தவறு எங்கு நடந்தாலும் நடவடிக்கை; ... அசுத்தமான நிலையில் கோவில் தெப்பக்குளம்; அறநிலையத்துறை அலட்சியம் அசுத்தமான நிலையில் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
600 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 அக்
2023
04:10

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கும்மளாபுரத்தில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவிலை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கும்மளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட விஜயநகரர் காலத்தில் கட்டப்பட்டது. கருவறை அர்த்த மண்டபம், முகமண்டபம் அனைத்தும் கருங்கல்லால் வேலைப்பாடுகளுடன் கூடியதாக உள்ளது. கருவறைக்கு மேலுள்ள விமானப்பகுதி அண்மை காலத்தை சேர்ந்தது. தற்போது அதிஷ்டானம் முழுவதையும் மறைத்து மேடாக்கி, சுற்றி கருங்கல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கோவில் தொடர்பான கல்வெட்டுகள் புதைந்திருக்கலாம். அது இருந்தால் இக்கோவிலின் வரலாற்றை இன்னும் தெளிவாக கூறலாம். இக்கோவிலின் சிறப்பு, கருவறையை சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள். நரசிம்மர் இரண்யனை தொடையில் கிடத்தி வதம் செய்தல், லட்சுமி நாராயணர், வேணுகோபால், நவநீதகிருஷ்ணன், ராமன், லட்சுமணன், சீதை உட்பட, 16க்கும் மேற்பட்ட சிற்பங்கள் கருவறை வெளிச்சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளன. கருட கம்பத்தின் பீடத்தின், 4 புறமும் இசைக்கருவிகளை வாசித்தபடி நடனமாடும் சிற்பங்களும் உள்ளன.  இவ்வாறு, அவர் கூறினார். வரலாற்று ஆய்வு குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால்  மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவில் இன்று (செப்.,11) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar