Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தவறு எங்கு நடந்தாலும் நடவடிக்கை; ... அசுத்தமான நிலையில் கோவில் தெப்பக்குளம்; அறநிலையத்துறை அலட்சியம் அசுத்தமான நிலையில் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
600 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
600 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 அக்
2023
04:10

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கும்மளாபுரத்தில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவிலை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கும்மளாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட விஜயநகரர் காலத்தில் கட்டப்பட்டது. கருவறை அர்த்த மண்டபம், முகமண்டபம் அனைத்தும் கருங்கல்லால் வேலைப்பாடுகளுடன் கூடியதாக உள்ளது. கருவறைக்கு மேலுள்ள விமானப்பகுதி அண்மை காலத்தை சேர்ந்தது. தற்போது அதிஷ்டானம் முழுவதையும் மறைத்து மேடாக்கி, சுற்றி கருங்கல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கோவில் தொடர்பான கல்வெட்டுகள் புதைந்திருக்கலாம். அது இருந்தால் இக்கோவிலின் வரலாற்றை இன்னும் தெளிவாக கூறலாம். இக்கோவிலின் சிறப்பு, கருவறையை சுற்றி செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள். நரசிம்மர் இரண்யனை தொடையில் கிடத்தி வதம் செய்தல், லட்சுமி நாராயணர், வேணுகோபால், நவநீதகிருஷ்ணன், ராமன், லட்சுமணன், சீதை உட்பட, 16க்கும் மேற்பட்ட சிற்பங்கள் கருவறை வெளிச்சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளன. கருட கம்பத்தின் பீடத்தின், 4 புறமும் இசைக்கருவிகளை வாசித்தபடி நடனமாடும் சிற்பங்களும் உள்ளன.  இவ்வாறு, அவர் கூறினார். வரலாற்று ஆய்வு குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar