Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 600 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் ... சென்னிமலையை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிறிஸ்துவ முன்னணி தலைவர் சரவணன் ஜோசப் கைது சென்னிமலையை சர்ச்சைக்குரிய வகையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அசுத்தமான நிலையில் கோவில் தெப்பக்குளம்; அறநிலையத்துறை அலட்சியம்
எழுத்தின் அளவு:
அசுத்தமான நிலையில் கோவில் தெப்பக்குளம்; அறநிலையத்துறை அலட்சியம்

பதிவு செய்த நாள்

18 அக்
2023
04:10

ஓசூர், தேர்ப்பேட்டையில் அசுத்தமான நிலையிலுள்ள கோவில் தெப்பக்குளத்தை, சுத்தம் செய்ய வேண்டிய அறநிலையத்துறை அலட்சியமாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், தேர்ப்பேட்டையில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவின்போது தெப்பல் உற்சவம் நடக்கும். அப்போது பக்தர்கள் தலைமுடி காணிக்கை அளித்து, இக்குளத்தில் தான் நீராடுவர். புண்ணிய தீர்த்தமாக பக்தர்களால் பார்க்கப்படும் இந்த தெப்பக்குளம், கடந்த சில ஆண்டுகளாக மிக அசுத்தமாக உள்ளது. இதை சுத்தம் செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை சுத்தம் செய்து கொடுக்கக்கூறி அதிகாரிகள் அணுகினால், பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தனிநபர்கள் முன்வருவர். ஆனால், அதற்கான முயற்சியை அறநிலையத்துறை எடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகமும் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அசுத்தமான தெப்பக்குளத்தில், குப்பை அதிகரித்து குளம் மேலும் மோசமாகி, தற்போது தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தெப்பக்குளம் அருகே உள்ள பத்ரகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாளுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது ஏகாதசி. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற ... மேலும்
 
temple news
பாலக்காடு; செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருத்தேர் உற்சவத்திற்காக புதிய தேர் கட்டும் பணி ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கட்சிக்குத்தான் கிராமத்தில் உள்ள மாணிக்க ராசப்பர் கோவில் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி ஜெ. நகரில் கற்பக விநாயகர் வடக்கத்தி அம்மன் கோயில் 11 வது ஆண்டு தெருக்கட்டு பொங்கல் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar