Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ... திருப்பரங்குன்றத்தில் கோயில் சார்பில் ரூ. 96 லட்சத்தில் வாகன காப்பகம் திருப்பரங்குன்றத்தில் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கலசத்தை திருட முயன்று முடியாததால் உடைத்து சென்ற மர்ம நபர்கள்
எழுத்தின் அளவு:
கோயில் கலசத்தை திருட முயன்று முடியாததால் உடைத்து சென்ற மர்ம நபர்கள்

பதிவு செய்த நாள்

05 நவ
2023
07:11

காரியாபட்டி: கோயில் கலசத்தை திருட முயன்று முடியாததால், ஆத்திரத்தில் சிலைகளை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை காரியாபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

காரியாபட்டி கே.கரிசல்குளத்தில் அய்யனார், கருப்பசாமி கோயில் உள்ளது. வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். விசேஷ நாட்களில் மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் சாமி கும்பிட்டு செல்வர். திறந்த வெளியில் சிலைகள் இருந்தன. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் அய்யனாருக்கு கட்டடம் கட்டி கோபுரம் எழுப்பப்பட்டு, கலசம் வைத்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் கலசம் திருடு போனது. கண்டுபிடிக்க முடியவில்லை. மறுபடியும் கோபுரத்தில் கலசம் வைக்க ஏற்பாடு செய்தனர். திருடு போகாமல் இருக்க கான்கிரீட்டில் இரும்பு பைப் பொருத்தப்பட்டு எளிதில் திருட முடியாத அளவிற்கு வலுப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கோபுரத்தில் இருந்த கலசத்தை திருட முயன்றனர். முயற்சி வீணானதால் ஆத்திரத்தில் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கினர். கதவு, உண்டியல் சேதப்படுத்தப்பட்டது. கிராமத்தினர் காரியாபட்டி போலீசார் தகவல் தெரிவித்தனர். தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.காரமடை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் மாசி திருவிழாவில் ஒற்றை பிரபையில் பந்தகாட்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 17 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடக்கின்றன. கோவிலின் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு அருகே கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar