Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை திருப்பதி ... பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கம் பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் சஷ்டி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

பதிவு செய்த நாள்

10 நவ
2023
12:11

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாட்களில் கோயிலில் தங்கிய விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

நவ. 13ல் காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா துவங்குகிறது‌. திருவிழா நடைபெறும் ஆறு நாட்களிலும் மதுரை மற்றும் வெளியூரிலிருந்து வரும் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். அவர்கள் தினம் காலை, மாலையில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் சென்று கோயிலில் தங்குவர். பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகம் சரவணப் பொய்கை கிரிவலப் பாதையில் உள்ள கழிப்பறைகளுடன், நடமாடும் கழிப்பறைகளும், தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட உள்ளது. கழிப்பறைகளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கோயிலில் அனைத்து மண்டபங்களிலும் மெகா டி.வி., க்கள் அமைத்து யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. மற்ற நேரங்களில் சுவாமி திரைப்படங்கள், கோயிலில் நடைபெற்ற திருவிழாக்களின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகிறது. விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு மதியம் தேன், தினை மாவு, சர்க்கரை கலந்த பிரசாதமும், மாலையில் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறும், இரவில் பாலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. தினமும் சுவாமி புறப்பாடு தவிர்த்த நேரங்களில் பக்தர்களுக்காக பக்தி கலை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தினம் மதியம் 1,500 பக்தர்களுக்கு இலவச உணவும் வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யும் பணி துவங்கியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar