Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 ... திருவண்ணாமலை தீபத் திரு விழா: நான்காம் நாளில் நாக வாகனத்தில் அண்ணாமலையார் உலா திருவண்ணாமலை தீபத் திரு விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபாஷ்டமி தினத்தில் கோ பூஜை; பாவங்கள், சாபங்கள் நீங்கும் என பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கோபாஷ்டமி தினத்தில் கோ பூஜை; பாவங்கள், சாபங்கள் நீங்கும் என பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 நவ
2023
04:11

பல்லடம்: பல்லடம் அருகே, கோபாஷ்டமி தினத்தை முன்னிட்டு கோ பூஜை வழிபாடு நடந்தது.

திருப்பூர் மண்டல கோ சேவா சமிதி சார்பில், கோபாஷ்டமி தினத்தை முன்னிட்டு, கோ பூஜை வழிபாடு, பல்லடம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் நடந்தது. முன்னதாக, நாட்டுப் பசு மாடுகள், காளை உள்ளிட்டவை குளிக்க வைக்கப்பட்டு, கொம்புகளுக்கு எண்ணெய் தடவி, மஞ்சள் குங்குமம் பூசி, மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாணத்தால் விநாயகர் செய்யப்பட்டு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ, ஊதுபத்தி சாம்பிராணி வைத்து விநாயகருக்கு வழிபாடு நடந்தது. இதையடுத்து, பசுக்களுக்கு தூபம் காட்டி, மலர்கள் தூவி, 108 அர்ச்சனை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அனைவரும் பசுக்களுக்கு பழம் மற்றும் அகத்திக்கீரைகளை வழங்கி வழிபட்டனர். 


இது குறித்து கோ சேவா சமிதி நிர்வாகிகள் கூறுகையில், கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது, பலராமனுடன் சேர்ந்து முதன் முதலில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்பிய நிகழ்வை விழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். அந்நாள், கோபாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் அஷ்டமி தினத்தில் இந்நாள் வருகிறது. இதை முன்னிட்டு, பசுக்களுக்கு பூஜை செய்து வழிபட்டால், பாவங்கள், சாபங்கள் நீங்கி, வாழ்க்கை வளம் வரும் என்பது ஐதீகம். அதன்படி, கோபாஷ்டமி தினத்தில் கோ பூஜை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar