Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோயிலில் தெப்ப ... திருவண்ணாமலையில் தரிசனத்துக்கு நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் வெளியேறிய பக்தர்கள் திருவண்ணாமலையில் தரிசனத்துக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீட்கப்பட்ட 11ம் நுாற்றாண்டு ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 66 ஆண்டுகளுக்கு பின் வழிபாடு
எழுத்தின் அளவு:
மீட்கப்பட்ட 11ம் நுாற்றாண்டு ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 66 ஆண்டுகளுக்கு பின் வழிபாடு

பதிவு செய்த நாள்

28 நவ
2023
08:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சிவபுரத்தில் உள்ள சிவகுருநாத சுவாமி கோவில் இருந்த 11ம் நுாற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் நடராஜர் சிலை, 1956ல் காணாமல் போனது. நாச்சியார்கோவில் போலீசில் 1969ல் புகார் செய்யப்பட்டது.

சர்வதேச போலீசார் உதவியுடன், அமெரிக்கா நாட்டின், நியூஜெர்ஸி மாகாண மியூசியத்தில் அந்த சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பின், 1988ல், நடராஜர் சிலை இந்தியா எடுத்து வரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் அந்த சிலை வைக்கப்பட்டிருந்தது. சிலையை வழிபாட்டுக்கு எடுத்து வர அனுமதி கேட்டு, சிவபுரம் கிராம மக்கள், கோவில் நிர்வாகம் சார்பில், கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சிவசக்திகண்ணன், திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள, சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோவில் ஐம்பொன் நடராஜர், விநாயகர் சிலைகளை கோவிலில் சிறப்பு வழிபாட்டுக்கு வைக்க உத்தரவிட்டார். கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிவபுரம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு, 66 ஆண்டுகளுக்கு பின், நடராஜர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோவிலில் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் ஏழுமலையப்பன் வெங்கடேஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar