Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை ... மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆச்சாள்புரம் கோவில் திருப்பணி; தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்
எழுத்தின் அளவு:
ஆச்சாள்புரம் கோவில் திருப்பணி; தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள்

10 டிச
2023
06:12

மயிலாடுதுறை; ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் திருப்பணிகளை தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்று உமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான தேவாரப் பாடல் பெற்ற இக்கோவில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்த தலமாகவும், முக்தி அடைந்த தலமாகவும் விளங்கி வருகிறது. மேலும் இக்கோவில் ரிண விமோச்சனர் பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் சோமவாரமான திங்கட்கிழமை அன்று சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம், குழந்தை மற்றும் வீடு மனை வாங்கும் பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு கடந்த 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று கோவில் திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். திருப்பணி தொடக்க விழாவை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பாலாலைய அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் வலதுபுற மூலையில் பூஜிக்கப்பட்ட கல்லை குரு மகா சன்னிதானம் வைத்து முகூர்த்தம் செய்து திருப்பணிகை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து ராஜகோபுரத்தின் அருகே முகூர்த்த காலினையும் குரு மகா சன்னிதானம் நட்டு தீபாராதனை செய்து வைத்தார். திருப்பணி தொடக்க விழாவில் தருமபுரம் ஆதீன பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, டாக்டர் முருகேசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவில் நிறமாலை உற்சவத்தை ஒட்டி செண்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar