Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பம்பை கடந்து வராத ... அதோ பார் ஐயப்பன்... சபரிமலையில் காடு மலை கடந்து வந்த பக்தர்கள்.. மனமுருகி வழிபாடு அதோ பார் ஐயப்பன்... சபரிமலையில் காடு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

11 டிச
2023
08:12

சபரிமலை: சபரிமலையில் தரிசன முன்பதிவில் குளறுபடி தொடர்கிறது. பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல காலம் நடந்து வரும் நிலையில், பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேர அளவின்படி முன்பதிவு வழங்கியதாக தேவசம்போர்டு கூறுகிறது. ஆனால், மூன்று நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல்லுக்கு, 10 கி.மீ., முன்பே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு இரண்டு மணி நேரம் காத்திருந்த பின் பம்பை வருகின்றனர். பம்பையிலும் நான்கு மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.

அதன் பின், அப்பாச்சிமேடு, மரகூட்டம் பகுதியில் உள்ள ஷெட்டுகளில் தடுத்து நிறுத்தி, சரங்குத்தி பாதையில் ஆறு கியூ காம்ப்ளக்ஸ் கட்டடங்களில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பின், சன்னிதானம் செல்ல முடிகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து, தரிசன நேரத்தை அதிகரிக்க முடியுமா என்று தந்திரியிடம் கேட்டு கூறும்படி, தேவசம்போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் மறுப்பு தெரிவித்த தந்திரி மகேஷ் மோகனரரு, பின், தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்திய பின், மாலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நடை திறப்பதற்கு ஒப்புதல் அளித்தார். இதன்படி, மதியம், 1:00 மணிக்கு அடைக்கப்படும் நடை, நேற்று முதல் மாலை, 4:00 மணிக்கு பதிலாக, 3:00 மணிக்கு திறக்கப்பட்டது. இதன் வாயிலாக தினமும், 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு தரிசனம் பதிவு செய்திருந்த பக்தர் அடுத்த நாள் மதியம் தான் தரிசனம் செய்ய முடிந்தது. அப்படியானால், ஆன்லைன் முன்பதிவால் என்ன பலன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முதியவர்கள், குழந்தைகளுக்கு தனி வரிசை இருப்பதாக கூறப்பட்டாலும், அதற்கு எப்படி செல்வது என வழி காட்டப்படவில்லை. பொதுவாக, ஒரு நிமிடத்தில் 70 - 80 பக்தர்கள் வரை படிகளில் ஏற வேண்டும். தற்போது, 50 பேர் மட்டுமே ஏறுகின்றனர். இதனால், 18 படிகளில் அனுபவம் வாய்ந்த போலீசாரை நிரந்தரமாக நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.எனவே, சபரிமலை வரும் பக்தர்கள் காத்திருப்பு நேரத்திற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், அடுத்த மாதம் 22-ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து கோவிலில் உள்ள மாடத்தில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar