Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அயோத்தி ... அனைத்து உயிர்களுக்கும் படி அளந்த பரமசிவன்; அஷ்டமி சப்பரங்களில் உலா வந்து அருள்பாலிப்பு அனைத்து உயிர்களுக்கும் படி அளந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முள் படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்; வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
முள் படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்; வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி

பதிவு செய்த நாள்

04 ஜன
2024
08:01

திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் பெண் சாமியார் முள் படுக்கையில் தவம் செய்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து அருளாசி பெற்று சென்றனர். லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மார்கழி 18ம் தேதி நாகராணி அம்மையார் என்பவர் விரதம் இருந்து முள்படுக்கையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவை ஒட்டி நடத்தப்படும் இக்காட்சியில் பெண் சாமியாரிடம் அருளாசி வாங்க ஏராளமான பெண்கள் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு விழா கடந்த மாதம் தொடங்கியது. லாடனேந்தலைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து உடைமுள், கற்றாழை முள், இலைக்கற்றாழை முள், உள்ளிட்ட பல்வேறு வகை முட்களை கொண்டு எழு அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்படுகிறது. நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகர் உள்ளிட்டோரை தரிசனம் செய்த பின் முள்படுக்கைக்கு சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நின்று சாமியாடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின் அப்படியே முள்படுக்கையில் சுமார் ஒரு மணி நேரம் படுத்தபடியே காட்சியளித்தார். குழந்தை வரம், திருமணம் வரம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பக்தர்கள் கூறுகையில் : சாதாரணமாக காலில் சிறிய முள் குத்தினாலே மூன்று நாட்களுக்கு வேதனை இருக்கும் ஆனால் நாகராணி அம்மையார் பல வருடங்களாகவே முள்படுக்கையில் படுத்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். பின் பொங்கலன்று இந்த முள்படுக்கையில் தீ வார்த்து அதில் இறங்குவார். முள் படுக்கை சாம்பலை எடுத்து வந்து பூஜை செய்து பலரும் திருநீறாக பூசுவதும் வழக்கம், என்றனர். முள் படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் நாகராணி அம்மையாரிடம் ஆசி வாங்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar