Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அயோத்தி ... அனைத்து உயிர்களுக்கும் படி அளந்த பரமசிவன்; அஷ்டமி சப்பரங்களில் உலா வந்து அருள்பாலிப்பு அனைத்து உயிர்களுக்கும் படி அளந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முள் படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்; வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
முள் படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்; வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி

பதிவு செய்த நாள்

04 ஜன
2024
08:01

திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் பெண் சாமியார் முள் படுக்கையில் தவம் செய்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து அருளாசி பெற்று சென்றனர். லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மார்கழி 18ம் தேதி நாகராணி அம்மையார் என்பவர் விரதம் இருந்து முள்படுக்கையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவை ஒட்டி நடத்தப்படும் இக்காட்சியில் பெண் சாமியாரிடம் அருளாசி வாங்க ஏராளமான பெண்கள் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு விழா கடந்த மாதம் தொடங்கியது. லாடனேந்தலைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து உடைமுள், கற்றாழை முள், இலைக்கற்றாழை முள், உள்ளிட்ட பல்வேறு வகை முட்களை கொண்டு எழு அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்படுகிறது. நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகர் உள்ளிட்டோரை தரிசனம் செய்த பின் முள்படுக்கைக்கு சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நின்று சாமியாடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின் அப்படியே முள்படுக்கையில் சுமார் ஒரு மணி நேரம் படுத்தபடியே காட்சியளித்தார். குழந்தை வரம், திருமணம் வரம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பக்தர்கள் கூறுகையில் : சாதாரணமாக காலில் சிறிய முள் குத்தினாலே மூன்று நாட்களுக்கு வேதனை இருக்கும் ஆனால் நாகராணி அம்மையார் பல வருடங்களாகவே முள்படுக்கையில் படுத்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். பின் பொங்கலன்று இந்த முள்படுக்கையில் தீ வார்த்து அதில் இறங்குவார். முள் படுக்கை சாம்பலை எடுத்து வந்து பூஜை செய்து பலரும் திருநீறாக பூசுவதும் வழக்கம், என்றனர். முள் படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் நாகராணி அம்மையாரிடம் ஆசி வாங்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar