Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா; சூரிய பிரபையில் சுவாமி உலா காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 மார்
2024
06:03

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி மலையில் உரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாததால், மலையேறும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், தென் கைலாயம் எனப்படும் பூண்டி, வெள்ளியங்கிரி மலை உள்ளது. அடிவாரத்தில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. கடந்த மாதம், 12ம் தேதி முதல் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மார்ச் 8ம் தேதி, மஹா சிவராத்திரி விழா என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேற உள்ளனர். இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறை மற்றும் குளியலறை சுகாதாரமற்ற முறையிலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. அதோடு, கழிப்பறையில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்யாமல், கழிப்பறையை பூட்டி வைத்துள்ளனர். மலையிறங்கி வந்து அடிவாரத்தில் ஓய்வு எடுக்கும் பக்தர்களின் மொபைல் போன்களும் அதிகளவில் திருடு போயுள்ளது. இதனால், மலையேற வரும் பக்தர்கள் உரிய அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்டு வருகின்றனர். கோவிலில் இருந்து மலையேறும் மலைப்படி மண்டபம் அருகிலும், கோவிலை சுற்றிலும் கூடுதலாக குடிநீர் வைக்க வேண்டும். மலையேறும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ குழுவினர் வேண்டும். அவசர காலத்திற்கு பயன்படுத்த வேண்டிய, வனத்துறை, கோவில் நிர்வாகம், போலீசார், மருத்துவத்துறையினரின் மொபைல் எண்களை, பக்தர்களுக்கு தெரியும்படி பல்வேறு இடங்களிலும் வைக்க வேண்டும். அவசர காலத்திற்காக ஆம்புலன்ஸ் கொண்டுவர வேண்டும். தண்ணீர் பந்தல் முதல் பூண்டி அடிவாரம் வரை உள்ள சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கழிப்பறை மற்றும் குளியலறையை சுத்தப்படுத்த வேண்டும். கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்ற வேண்டும். கோவிலுக்கு பின்புறம், மலையேறி இறங்கும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக தற்காலிக கூரைகள் அமைக்க வேண்டும். அறநிலையத்துறை, வனத்துறை, போலீசார், சுகாதாரத்துறை, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி என, அனைத்து துறைகளையும் இணைத்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar