Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிசூழ்ந்த நங்கை அம்மன் கோயிலில் ... வெள்ளம்புலி தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளம்புலி தர்ம முனீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்., 22ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:
ஏப்., 22ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2024
04:04

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருகோலத்துடன் ஏப்., 22 இரவு வைகை ஆற்றில் இறங்குகிறார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கோடை திருநாள் என்னும் சித்திரைத் திருவிழா ஏப்., 18ல் காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. அன்று காலை 9:30 மணிக்கு மூலவர் பரமஸ்வாமி, உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களுக்கும் காப்பு கட்டப்படும். தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, யாக சாலையை அடைந்து யாக பூஜைகள் துவங்கும். அன்று முதல் தினமும் இரவு 7:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. ஏப்., 22 காலை 9:30 மணிக்கு கும்பத் திருமஞ்சனம் நிறைவடைந்து, இரவு 12:30 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, ஈட்டி, வளரி, தடி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். பின்னர் கருப்பண சுவாமியிடம் விடை பெற்று வைகை ஆற்றில் இறங்க உள்ளார். ஏப்., 23 காலை 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, பல ஆயிரம் பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சி அடித்து அழகரை வரவேற்பர். அன்று மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து, இரவு வண்டியூர் எனும் காக்கா தோப்பு மண்டகப்படியை அடைகிறார். ஏப்., 24 இரவு சேஷ வாகனத்தில் அமர்ந்து, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து, விடிய விடிய தசாவதார சேவையில் காட்சியளிப்பார். தொடர்ந்து கருட வாகனம், பட்டுப் பல்லக்கில் வைகையில் வலம் வருகிறார். ஏப்., 27 அன்று காலை பூ பல்லக்கில் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் நகர் முழுவதும் வலம் வந்து மாலை திருக்கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதி உலா சென்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடைகள் இன்று திருப்பதி வந்தது. திருக்குடைகளுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar