Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பெருமாளுக்கு மின்சார ... திருமலையில் மூன்று நாள் வசந்தோத்ஸவம்; ஏப்ரல் 21 முதல் 23 வரை நடக்கிறது திருமலையில் மூன்று நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2024
01:04

திருச்சி: திருவானைக்காவல், ஜம்புகேசுவரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல், சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. செங்கோட்சோழனால் கட்டப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.  அதன்படி,  பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மார்ச் 17ம் தேதி துவங்கியது. கடந்த 3ம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து தினசரி சுவாமி, அம்பாளுடன் ரிஷப வாகனம், காமதேனு வாகனம், சூரிய, சந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா கண்டருளும் வைபவம் நடைபெற்றது. 6ம் திருநாளான இன்று பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6.30 மணியளவில்,  அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஜம்புகேஸ்வரர சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். மற்றொரு தேரில், அகிலாண்டேஸ்வரி தாயார் ஒரு தேரிலும் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன் செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முதலில் சுவாமியும், அம்பாளும் அருள்பாலித்த தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர்.  பின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளிலும் வலம் வந்து தேர் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசனம் செய்னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar