Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லாண்டி அம்மன் உத்தரவுடன் நாளை ... பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் கடலில் வெளிப்பட்ட கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு கோவில் சிதைவுகள்
எழுத்தின் அளவு:
மாமல்லபுரம் கடலில் வெளிப்பட்ட கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு கோவில் சிதைவுகள்

பதிவு செய்த நாள்

16 மே
2024
12:05

மாமல்லபுரம்: மாமல்லபுரம், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டில், பல்லவர் கால துறைமுகமாக விளங்கியது. ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன், இங்குள்ள கடற்கரை பகுதியில், சைவ - வைணவ வழிபாட்டு கற்கோவிலை அமைத்தார்.

இக்கோவிலை கடல் சூழ்ந்து அழியாமல் பாதுகாக்க, இந்திய தொல்லியல் துறை, 40 ஆண்டுகளுக்கு முன், அதைச் சுற்றிலும் பாறை கற்கள் குவித்தது. கோவில் வளாகம் வெளியே, வடபுறம் மீனவர் பகுதி உள்ளது. இப்பகுதியில், கடல் நீரோட்ட திசைமாற்ற நிகழ்வால் கடலரிப்பு ஏற்பட்டு, அவ்வப்போது கடற்கரை மணற்பரப்பு அழியும். கடல்நீர் நிலத்தில் புகும். பின், கடல் சற்றுத் தொலைவிற்கு உள்வாங்கி, மணற்பரப்பு உருவாகும். கடந்த 2022 கடலரிப்பின் போது, கடற்கரை கோவில் அருகில், மகிஷாசுரமர்த்தினி குடைவரையை ஒட்டிய பகுதியில், பழங்கால கோவிலின் சிதைவுகள் வெளிப்பட்டன. நிலத்தடியில் புதையுண்டிருந்த கோவில் கல்துாண்கள், கோபுர கலசம், மேல்தள தாங்கு கற்கள், சங்ககால வகை செங்கற்கள், மண்பாண்ட சிதறல்கள், களிமண் கலவை சுவர் தோற்றம் ஆகியவை, முதல்முறையாக வெளிப்பட்டன. மீனவர் ஒருவர், செப்பு நாணயத்தை கண்டெடுத்தார். தொல்லியல் துறையினர், கல் துாண்கள், செங்கற்கள் ஆகியவற்றை, ஆய்விற்காக சேகரித்தனர். பின், கடல் உள்வாங்கி, மணற்பரப்பு உருவாகி, சிதைவுகள் நிலத்தடியில் புதையுண்டன. கடந்த ஆண்டு கடலரிப்பில் வெளிப்படாத நிலையில், தற்போது கடலரிப்பு ஏற்பட்டு, அவை மீண்டும் வெளிப்பட்டுள்ளன. சில நாட்களில், கடலரிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், முழுமையான சிதைவுகள் வெளிப்பட வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம், குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதியில் அமைந்துள்ள முனியப்ப சுவாமி கோவில் 15-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
வந்தவாசி; வந்தவாசி அருகே, 36 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சிலை செய்ய, 150 டன் கொண்ட பாறை, ராட்சத லாரி மூலம், பழவேரி ... மேலும்
 
temple news
மோகனுார்; நாவலடி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக, 7ம் ஆண்டு நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar