Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லவர் கால கொற்றவை சிற்பம் ... மணாலி ஹிடிம்பா தேவி கோயிலில் குவிந்த பக்தர்கள் மணாலி ஹிடிம்பா தேவி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவிலில் ஆடல் வல்லானின் ஆனந்த தரிசனம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவிலில் ஆடல் வல்லானின் ஆனந்த தரிசனம்

பதிவு செய்த நாள்

28 மே
2024
11:05

திருப்பூர்: தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, ஸ்ரீநடராஜப்பெருமான் - சிவகாமசுந்தரி அம்மன் மஹாதரிசன காட்சி, கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்வேறு வாகன காட்சிகளை தொடர்ந்து, 23 மற்றும் 24ம் தேதிகளில், தேரோட்டம் விமரிசையாக நடந்தது. விழாவின், 11வது நாளான நேற்று, மஹா தரி சன காட்சி நடைபெற்றது. கனகசபையில் இருந்து அருள்பாலிக்கும் ஆனந்த நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி அம்மனுக்கு, 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் தனி சப்பரங்களில் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பல்வேறு வைபவங்கள் நடந்தாலும், ஸ்ரீநடராஜப்பெருமான் - சிவகாமசுந்தரி அம்மன், கோவிலில் இருந்து, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வெளியே வருவது வழக்கம். ஆருத்ரா தரிசனத்தின் போதும், தேர்த்திருவிழா மஹா தரிசனத்தின் போது மட்டும், ஆடல்வல்லான் என்று போற்றப்படும் ஆனந்த நடராஜர் திருவீதியுலா வந்து காட்சிகொடுக்கிறார். அதன்படி, நேற்றைய மஹா தரிசனத்தின் போது, திருவீதியுலா வந்த, அம்மையப்பரை, பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, பெருமாள் கோவில் வீதி வழியாக வந்து, அம்மையப்பருடன் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர். நான்கு வீதிகளை சுற்றி வந்த பிறகு, ஈஸ்வரன் கோவில் அருகே வந்து, ஸ்ரீநடராஜர் - சிவகாமசுந்தரி அம்மனிடம்விடைபெற்று, பெருமாள்கோவில் வீதி வழியாக நம்பெருமாள் மீண்டும் கோவிலுக்கு சென்றார். தேர்த்திருவிழாவில் இன்று, மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar