Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராஹி கோயில்களில் ஆஷாட நவராத்திரி ... கூத்தாட்டுகுளம் கோயிலில் பக்தர்களுக்கு மருந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி துவக்கம் கூத்தாட்டுகுளம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித மானசரோவர் யாத்திரை பக்தர்களை தடுக்கும் சீனா
எழுத்தின் அளவு:
புனித மானசரோவர் யாத்திரை பக்தர்களை தடுக்கும் சீனா

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2024
10:07

புதுடில்லி; புனித மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் இரண்டு வழிகளை சீனா கடந்த ஐந்து ஆண்டுளாக அடைத்துள்ள நிலையில், நேபாளம் வழியாக செல்லும் மூன்றாவது வழியையும் தற்போது மூடி இருப்பது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது. இமயமலைத் தொடரில் உள்ள கைலாய மலையையும், அங்குள்ள மானசரோவர் ஏரியையும் தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான ஹிந்துக்கள் கைலாஷ் – மானசரோவர் புனித யாத்திரை செல்கின்றனர்.


உத்தரகண்ட் எல்லையில் உள்ள லிபுக் கணவாய் வழியாகவும், சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகவும் செல்லும் இந்தியர்கள், அதன் பின் சீன எல்லை கடந்து செல்வது வழக்கம். மூன்றாவது வழியாக நம் அண்டை நாடான நேபாளம் வழியாக சென்று சீன எல்லையைக் கடந்தால் மட்டுமே கைலாய மலையை தரிசிக்கமுடியும். கடந்த 2020ல் இந்தியா – சீனா மோதலால், இரு நாட்டு உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2020 முதல் லிபுக் கணவாய் மற்றும் நாதுலா கணவாய் பாதையில் உள்ள சீன எல்லை மூடப்பட்டது. இதனால், கடந்த நான்கு ஆண்டுகளாக நேபாளம் வழியாகவே இந்திய பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு, இந்த வழியாக செல்லும் இந்தியர்களை தடுப்பதற்காகவே சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த ஆண்டு, இந்தக் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி, மானசரோவர் செல்வதற்கான சீன எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவது இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar