Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் ... பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்காக பாதையில் தடுப்புகள் பழநி வரும் பாதயாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிச்சி அரவான் திருவிழாவிற்கு ஐகோர்ட் கோர்ட் அனுமதி
எழுத்தின் அளவு:
குறிச்சி அரவான் திருவிழாவிற்கு ஐகோர்ட் கோர்ட் அனுமதி

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2024
12:07

போத்தனூர்; குறிச்சி அரவான் திருவிழாவை நடத்த அனுமதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


குறிச்சியில் அனைத்து சமூகத்தாரும் இணைந்து ஆண்டுதோறும் அரவான் திருவிழாவை நடத்துவர். ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான இவ்விழா கடந்தாண்டு, சில சமூக தலைவர்களின் எதிர்ப்பால் நடக்கவில்லை. மதுக்கரை தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து விழா குறித்து எந்தவொரு சமூகத்தாரும் கூட்டம் நடத்தக்கூடாது. மீறி கூட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சார்பில் எதிர்ப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் முருகா நகரை சேர்ந்த வடிவேல் சென்னை ஐகோர்ட்டில் விழா நடத்த போலீஸ் அனுமதி கோரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர், போத்தனூர் சரக உதவி கமிஷனர், போத்தனூர், சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, கடந்த, 23ம் தேதி முதல் விழா நடத்தவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை மாநகர போலீசார் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.


இதுகுறித்து வடிவேல் கூறுகையில், " அரவான் திருவிழா நூற்றாண்டுகட்கும் மேலாக நடந்து வருகிறது. ஒரு சிலரின் எதிர்ப்பால் கடந்தாண்டு நடக்கவில்லை. அதனை கருத்தில்கொண்டு போலீசார் விழாவிற்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து, 4ம் தேதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். 23ம் தேதி முதல் விழா நடத்தவும், போலீஸ் பாதுகாப்பு தரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தீர்ப்பு நகல் நேற்று ( 24ம் தேதி) இரவு தான் கிடைத்தது. அனைத்து தரப்பினரிடமும் இதுகுறித்து பேசி, உடனடியாக விழா நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar