Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத ... ஆடி கடைசி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் ஆடி கடைசி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2024
10:08

சபரிமலை: சபரிமலையில், இன்று அதிகாலை, நிறைபுத்தரிசி பூஜை நடந்தது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் நடந்தது. பின், நிறைபுத்தரிசி பூஜைகளுக்கான சடங்கு துவங்கியது.


நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று (ஆக.,11) மாலை திறக்கப்பட்டது. இன்று(ஆக.,12) காலை தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் பூஜை நடைபெற்றது. அனைத்து ஆடி மாதங்களிலும் சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன் கோயில் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து பவனியாக சபரிமலை கொண்டு வந்து ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து நெற்கதிர்கள் சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. வேறு விசேஷ பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் நிறை புத்தரிசி பூஜை சடங்குகள் தொடங்கியது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நெற்கதிர்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து சன்னதிக்குள் கொண்டு வந்தார். அங்கு நெற்கதிர்களுக்கு தந்திரி மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தினார். தொடர்ந்து, அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின், வழக்கமான நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar