Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ... குரு ஸ்தலமான திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை குரு ஸ்தலமான திருப்புவனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூரில் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
உப்பூரில் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

06 செப்
2024
06:09

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகருக்கு இரு தேவியருடன் நடைபெற்ற திருமண விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த மூலவர் விநாயகர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால், வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் சீதாபிராட்டியை மீட்பதற்காக ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன் இந்த விநாயகரை வணங்கிச் சென்றதாக கூறப்படுவதால் சிறப்புமிக்க கோயிலாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. இங்கு ஆக.29ல் கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் வெள்ளி மூசிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிலையில் விழாவில் எட்டாம் நாளான நேற்று மூலவர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில், சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. தென் தமிழகத்திலே இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால், விழாவில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற மொய் விருந்தில், பரிமாறப்பட்ட கொழுக்கட்டைகளை பக்தர்கள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து இருதேவியருடன் விநாயகர் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar