Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோத்தகிரி கோபாலகிருஷ்ணர் கோயிலில் ... முத்தாரம்மன் கோவில் கொடை விழா விமரிசை முத்தாரம்மன் கோவில் கொடை விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி மாதம் துவக்கம்; காரமடை அரங்கநாதருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
புரட்டாசி மாதம் துவக்கம்; காரமடை அரங்கநாதருக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

17 செப்
2024
04:09

மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாதம் துவங்கியதை அடுத்து, காரமடை அரங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி, மாசி மகத் தேரோட்டம், புரட்டாசி சனிக்கிழமை ஆகிய விழாக்கள், வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் இன்று துவங்கியது. மூலவர், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான ஹிந்துக்கள் சனிக்கிழமை விரதம் இருப்பர். அவர்களுக்கு பிடித்தமான சனிக்கிழமையில், அரங்கநாதர் கோவிலுக்கு வந்து, பெருமாளை வழிபட்டு, தாசர்களுக்கு படையல் இட்டு, அவர்கள் கொடுக்கும் அரிசி, காய்கறிகளை வாங்கிச் சென்று, வீட்டில் பொங்கலிட்டு வழிபாடு செய்வர். புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா, வரும், 21ம் தேதி நடைபெற உள்ளது. 28ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர் இரண்டாம் தேதி மஹாளய அமாவாசையும் நடைபெற உள்ளது. நாலாம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து, ஐந்தாம் தேதி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், அக்டோபர், 12ம் தேதி நான்காம் சனிக்கிழமை விழாவும், சரஸ்வதி பூஜையும், 13ம் தேதி விஜயதசமியும், குதிரை வாகனத்தில் அரங்கநாதப் பெருமாள் எழுந்தருளி, அம்பு போடும் விழாவும், 19ம் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழாவும் நடக்க உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று மாதுளை அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாகசாலை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார ... மேலும்
 
temple news
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar