கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை சர்ச் தேர்த்திருவிழாவை ஒட்டி இன்று கொடியேற்றம் நடந்தது. கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை அன்னை பசலிக்கா சர்ச், தேர்த்திருவிழாவை ஒட்டி இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, தினமும் திருப்பலி, மறையுரை நடக்க உள்ளது. வரும், 4ம் தேதி கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டு பாடல்பலி நடக்கிறது. வரும், 6ம் தேதி இரவு, 7:00 மணிக்கு அன்னையின் அலங்கார திருத்தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை சர்ச் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.